ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மர்ம நோயால் மாடுகள் பாதிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து கிராமங்களுக்கு நேரில் சென்ற கால்நடை மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தி உரிய சிகிச்சை அளித்தனர். அரக்கோணம் அடுத்த முருங்கை, கணபதிபுரம், சித்தூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் பசுமாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மர்மநோய் தாக்குதலுக்கு ஆளாகி வந்தன. கால்நடைகள் நடக்கமுடியாத அளவுக்கு பாதிப்பு அதிகரித்துவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்திருந்தனர்.