கோத்தகிரி: கோத்தகிரி அருகே அகனாடு எஸ்டேட் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அகனாடு எஸ்டேட் பகுதியில் உணவுத் தேடி வந்த கரடி ஒன்று நேற்று நள்ளிரவு குடியிருப்பு அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனைப் பார்த்த ஊர் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.