கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த கரடியை மீட்ட வனத்துறை

கோத்தகிரி: கோத்தகிரி அருகே அகனாடு எஸ்டேட் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அகனாடு எஸ்டேட் பகுதியில் உணவுத் தேடி வந்த கரடி ஒன்று நேற்று நள்ளிரவு குடியிருப்பு அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனைப் பார்த்த ஊர் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை வனச்சரகர், வனவர், வன ஊழியர்கள் ஊர் மக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்த கரடியை வெளியேற்ற ஏணி அமைத்தனர். பிறகு அந்த கரடி தாமாகவே  கிணற்றுக்குள் இருந்து வெளியே வந்து அருகில் இருந்த முற்புதருக்குள் சென்று மறைந்தது.

Related Stories: