மாலே: 13வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா-நேபாளம் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றன. நேற்று இரவு நடந்த இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதின. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 49வது நிமிடத்தில் கேப்டன் சுனில்சேத்ரி கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார்.