மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. தனது வீட்டருகே ஒரு பெண்ணை காதலித்து வந்தார். மேலும், திருமணம் செய்வதாக கூறி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்தப் பெண் கர்ப்பமானதும், மலைச்சாமி திருமணம் செய்ய மறுத்துள்ளார். வழக்கு பதிந்த போலீசார், மலைச்சாமியை கைது செய்தனர். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த வழக்ைக விசாரித்த ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றம், மலைச்சாமிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2015ல் தீர்ப்பளித்தது.