வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வாபஸ் பெறப்பட்டது. அப்போது, காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் காரில் தப்பி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் 29ம் தேதி அமெரிக்க ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில், அகமதி என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.