வருசநாடு: வருசநாடு அருகே, சின்னச்சுருளி அருயில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள சின்னச்சுருளி அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த சில தினங்களாக வருசநாடு வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது, இதனால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கக் கூடாது என மேகமலை வனத்துறை எச்சரித்துள்ளது.