சேலம்:சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. கடந்த 11ம் தேதி ஏற்காடு மலைப் பகுதியில் அதிகளவு மழை பெய்ததால், மலைப்பாதையில் உள்ள 2வது மற்றும் 3வது கொண்டை ஊசி வளைவின் இடையே சுமார் 25 மீட்டர் உயரம் மற்றும் 15 மீட்டர் அகலத்திற்கு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக சீரமைப்பு பணி 12ம் தேதி முதல் பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள், பணியாளர்களை கொண்டு குவாரி மணல் மூட்டைகளை அடுக்கும் பணி நடந்தது. சீரமைப்பு பணிகள் கடந்த 14ம் தேதி மாலை நிறைவடைந்தது.