பெங்களூரு: பெங்களூருவில் ஆபத்தான நிலையில் இருந்த 3 மாடி கட்டிடத்தை பொதுமக்களுக்கு பாதிப்பின்றி அதிகாரிகள் முழுமையாக அகற்றியுள்ளனர். பெங்களூரு மெஜிஸ்டிக் ரயில் நிலையம் அருகே உள்ள கமலா நகர் பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்றின் கீழ் பகுதியில் உள்ள தூண் நேற்றிரவு இடிந்து விழுந்தது. இதையடுத்து எந்நேரம் வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழக்கூடும் என்ற நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து அப்பகுதியில் குடியிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.