புதுடெல்லி: உலகளவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல் வழி பாதுகாப்பு குறித்து இந்திய-அமெரிக்க கடற்படை தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க கடற்படை தளபதி மைக்கேல் கில்டே 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய கில்டே, இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங்கை நேற்று சந்தித்து பேசினார். இந்தோ-பசிபிக் உள்ளிட்ட கடல் வழி பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய கடல்வழி பாதுகாப்பு, அங்குள்ள நிலைமைகள், கடல்வழி பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தளபதிகளும் ஆலோசனை நடத்தினர்.