பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்து பலத்த மழையால் சிட்டியா ஜுவாங் என்ற நகரமே வெள்ளத்தில் மிதக்கின்றது. அதேபோல் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள டாலி நகரத்தை வெள்ளப்பெருக்கு சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவிலான விலை நிலங்கள் கண்ணுக்கு தெரியாத அளவில் மூழ்கி உள்ளன. வெள்ளம் நெடுஞ்சாலைகளை அடித்து சென்றுவிட்டதால் டாலி கவுண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் இதர பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.