ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது .ஜம்மு - காஷ்மீரில் கடந்த வாரம் மருந்துக் கடை உரிமையாளர், சாலையோர வியாபாரி, டாக்ஸி ஓட்டுநர் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் உட்பட 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் நான்கைந்து தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியதாக உளவுத் துறை தகவல் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பூஞ்ச், ரஜோரி, சோபியான், அனந்த்நாக், பந்திப்போரா ஆகிய மாவட்டங்களில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.