நாமக்கல்: இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நாமக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை என்று விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.