பெங்களூரு : நவீன காலத்து இந்திய பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள தயங்குவதாகவும் தனித்து வாழவே விரும்புவதாகவும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெங்களுருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் பேசிய அவர், வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற பெண்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார். மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் இந்தியர்களிடம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்றும் இது நல்லதிற்கே இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.