ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கிராமத்தில் உள்ள சேதுபதி மன்னர் காலத்து ஆறுமுக கோட்டை சிதிலமடைந்து அலங்கோலமாகி வருகிறது. அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே செங்கமடை கிராமத்தில் அமைந்துள்ளது ஆறுமுக கோட்டை. ராமநாதபுரம் சேது சீமையை ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களில் ஒருவரான முத்துவிஜயரகுநாத சேதுபதியால், பிரஞ்சு பொறியாளர்களை கொண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செங்கமடை ஆறுமுக கோட்டையை செங்கல், சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்ற பொருட்களை கொண்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பானது 6 இதழ்களை கொண்ட ஒரு மலர் போன்ற வடிவில் அமைந்திருப்பதால்ஆறுமுக கோட்டை என பெயர் வந்துள்ளது.