குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது ஆசிட் வீச்சு: கணவன் கைது

தண்டையார்பேட்டை:  தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முருகன் (41), பெயின்டர். இவர், தனது அக்கா மகள் தமிழரசியை (37) திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு, 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், தமிழரசி தனது கணவரை பிரிந்து, மகள்களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், தண்டையார்பேட்டை ஏ.இ.கோயில் தெருவில் தமிழரசி சொந்தமாக கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இந்த கடைக்கு வந்த முருகன்,  நாம் சேர்ந்து வாழலாம் என மனைவியிடம் கூறியுள்ளார்.

ஆனால், தமிழரசி அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்தரமடைந்த முருகன் மறைத்து வைத்திருந்த கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை எடுத்து, தமிழரசி முகத்தில் வீசினார். காயமடைந்த அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து, முருகனை கைது செய்தனர்.

Related Stories: