தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முருகன் (41), பெயின்டர். இவர், தனது அக்கா மகள் தமிழரசியை (37) திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு, 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், தமிழரசி தனது கணவரை பிரிந்து, மகள்களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், தண்டையார்பேட்டை ஏ.இ.கோயில் தெருவில் தமிழரசி சொந்தமாக கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இந்த கடைக்கு வந்த முருகன், நாம் சேர்ந்து வாழலாம் என மனைவியிடம் கூறியுள்ளார்.