விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை மகளிர் போலீஸ் விசாரிக்க உத்தரவிடக் கோரி மனு

கோவை: விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை மகளிர் போலீஸ் விசாரிக்க உத்தரவிடக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர மகளிர் போலீஸ் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கடந்த வாரம் வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் விமானப்படை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. கோவை விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த 27ம் தேதி சக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: