சென்னை: மத்திய அமைச்சகங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த 18,989 பேர் பணியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அரசு பதவிகளில் பதவி உயர்வு வழங்கும் போது எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை பின்பற்றுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதவி உயர்வின் போது எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை பின்பற்றுவதை நியாயப்படுத்தும் தரவுகள் இருக்கின்றனவா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.