வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் தொடர்மழையால் செங்கல் சூளை பணிகள் பாதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள், உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, தங்கம்மாள்புரம், கண்டமனூர், குமணந்தொழு, மூலகடை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், செங்கல் சூளை பணிகள் அடியோடு பாதிப்படைந்துள்ளது. மேலும், உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், செங்கல் சூளை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.