கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாய், மண், மக்களுக்கு உண்மை தலைவராக விளங்குகிறார் என்று திரிபுரா பாஜ எம்எல்ஏ புகழாரம் சூட்டியுள்ளார். திரிபுராவின் தலாய் மாவட்டம் சுர்மா தொகுதி எம்எல்ஏ ஆஷிஷ்தாஸ். இவர் கொல்கத்தாவில் உள்ள காளி கோயிலில் மொட்டை அடித்துக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘மதவாத கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொண்டதற்காக தலைமை மொட்டை அடித்துக் கொண்டேன். மேற்கு வங்க முதல்வர் தாய், மண், மக்களுக்கு உண்மை தலைவராக விளங்குகிறார். அவர் எதிர்காலத்தில் பிரதமரானால் ஒவ்வொரு வங்காளிக்கும் பெருமை. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி அனைவரின் இதயத்தையும் கவர்ந்தார்.