பொன்னேரி: பாதாள சாக்கடை பள்ளத்தால் விபத்து ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின்படி கடந்த 2 ஆண்டுகளாக பணி தொடங்கப்பட்டது. இதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 9வது வார்டில் உள்ள தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து புகாரளித்தும் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டிவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு கண்டன கோஷமிட்டனர்.