புதிய ரேஷன் கடை திறப்பு

புழல்: புழல் அருகே லட்சுமிபுரம் செகரட்ரியேட் காலனியில் 15க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் உள்ளது. இங்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு புதிதாக நியாயவிலை கடையை திறக்க வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், சைதாப்பேட்டை தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் லட்சுமிபுரம் செகரட்ரியேட் காலனி பூங்கா அருகே புதிதாக நியாயவிலை கடை அமைக்கப்பட்டது.  இதை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Related Stories: