தஞ்சை: திக தலைவர் கி.வீரமணி தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: உயிர்கொல்லி நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். நீட் தேர்வை ஒழித்து விடுவதாக முதல்வர் கூறினாரே. இன்னும் ரத்து செய்யவில்லையே என கேள்வி வருகிறது. ஒன்றிய அரசிடம் போராடி தான் திரும்ப பெற செய்ய வேண்டும். சட்ட ரீதியாக நமக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த முறையும் மசோதாக்கள் அனுப்பியும் அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் கொண்டு வந்த 2 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதை ரகசியமாக வைத்து விட்டனர்.