புதுடெல்லி: சட்ட சேவைகள் ஆணையத்தின் பான் இந்தியா சட்ட விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரசாரம் டெல்லியில் நேற்று தொடங்கியது. 6 வார காலம் நடைபெறும் இதனை தொடங்கி வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக பணியாற்ற, சிறப்பான முயற்சிகளை சட்ட சேவைகள் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் நேரத்தின் ஒருபகுதியை ஒதுக்க வேண்டும்.