நாகர்கோவில்: காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை சென்னை சாய்ராம் மெட்ரிக் பள்ளி மாணவர் மாஸ்டர் சர்வேஷ் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம், திருவள்ளுவர் சிலையில் இருந்து தொடங்கி சென்னை நோக்கி புறப்பட்டார். இவர் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, தென் இந்தியாவின் முக்கிய பகுதிகளின் வழியாக 10 நாட்களில் 750 கிமீ தனது தொடர் ஓட்டத்தின் முடிவில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை அடைகிறார். இவரது நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரியில் இன்று காலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.