பல்லாவரம்: பொழிச்சலூர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பாஜ நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு, பாஜ மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது. பிரதமர் மோடி ஆட்சியில், ஒரு தந்தை போல், சகோதரர் போல், நண்பர் போல் ஒவ்வொரு வீட்டிற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்கிறார். கடந்த 7 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு மட்டும் சுமார் ரூ.6 லட்சம் கோடி திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மோடி ஆட்சியில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும். குடிநீர் வழங்கும் ஜல்தன் யோஜனா திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க ஆயுஸ்மா திட்டம் உள்பட பல திட்டங்கள் வழங்கப்படுகின்றன.