திருவனந்தபுரம்:கேரள மாநிலம், வயநாடு தொகுதி எம்பி.யான ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன் தினம் கேரளா வந்தார். இந்த தொகுதிக்கு உள்பட்ட மலப்புரம் மாவட்டம், காளிகாவு பகுதியில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியது:
இந்தியா உயிர் துடிப்பு உள்ள ஒரு கலாசார பூமியாகும். சாவர்க்கர் போல் உள்ளவர்களை அங்கீகரிப்பவர்களுக்கு இதை ஏற்றுக் கொள்ள முடியாது.