துபாய்: ராஜஸ்தான் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. துபாயில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பந்துவீசியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் 58 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெய்ஸ்வால் 31 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. அடுத்து 20 ஓவரில் 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.