திருமலை: ஆந்திராவை சேர்ந்த பக்தர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்படுவது இல்லை. மேலும், கோயிலுக்கு வரும் இந்து மதத்தை சேராத மற்றவர்களிடம் இருந்து உறுதிமொழி பத்திரம் கூட நிபந்தனைகளின்படி பெறுவதில்லை,’ என குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘ முதலில் நீங்கள் எந்த ஊர்?’ என கேட்டார். அதற்கு மனுதாரர், ‘ஆந்திராவை சேர்ந்தவன்,’ என தெரிவித்தார்.