புதுடெல்லி: பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டத்தை, ‘பிஎம் போஷான் சக்தி நிர்மான்’ என்ற புதிய பெயருடன் அடுத்த 5 ஆண்டிற்கு ரூ1.30 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பள்ளிக் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கச் செய்ய நாடு முழுவதும் மதிய உணவு தேசிய திட்டம் என்ற பெயரில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதை தேசிய அளவிலான திட்டமாக்கி ‘பிஎம் போஷான் சக்தி நிர்மான்’ என பெயர் மாற்றம் செய்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ1.30 லட்சம் கோடி நிதியுடன் செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.