மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சின்ன கொளம்பாக்கத்தில் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில் அரிய வகை கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கான பல்வேறு வசதிகளை கொண்ட இனோவேஷன் ஆய்வக திறப்பு விழா நடந்தது. கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். டிஜிபி சுனில்குமார் சிங் கலந்துகொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்தார். கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி, முதல்வர் காசிநாதன் பாண்டியன், புல முதல்வர் சுப்பாராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.