14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான கொல்கத்தா அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய இடது சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இவருக்கு பயிற்சியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டி தொடரில் இருந்து விலகி நாடு திரும்பி இருக்கிறார். சமீபத்தில் தான் குல்தீப், முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து மீண்டு வந்திருந்தார்.