நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ரத்த பரிசோதனை நிலையத்திற்கு சீல்: 4 மருந்து கடைகள் மீதும் நடவடிக்கை

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், முருகன்(40) என்பவர், ஜெமினி என்ற பெயரில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது ரத்த பரிசோதனை நிலையம் முன்பு, அதிகளவில் மக்கள் கூட்டமாக கூடிய வண்ணம் இருந்தனர். இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை குழு அங்கு  திடீர் ஆய்வில் ஈடுபட்டது. விசாரணையில், முருகன் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, மருந்து பாட்டில்கள், ஊசிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரத்த பரிசோதனை நிலையத்தை பூட்டி சீல் வைத்தனர்.இதே போல், தும்பல் ஊராட்சியில் வேறொருவர் பெயரில் அனுமதி பெற்று, முறைகேடாக மருந்து கடையை நடத்தி வந்த சங்கீதா மற்றும் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான மருந்து கடைகளுக்கும், விதிகளை மீறி நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றுதல், ஊசி போடுதல் போன்றவற்றில் ஈடுபட்டதற்காக மேலும் 2 மருந்து கடைகளுக்கும், சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்….

The post நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ரத்த பரிசோதனை நிலையத்திற்கு சீல்: 4 மருந்து கடைகள் மீதும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: