காபூல்: ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்குமாறு விமான நிறுவனங்களுக்கு தாலிபன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கடந்த மாதம் 15ம் தேதி கைப்பற்றினர். அப்போதும் காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க நிறுவனம், கடந்த 30ம் தேதி அங்கிருந்தும் வெளியேறியது. இதையடுத்து தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. இந்த நிலையில் தாலிபான் வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்பட்டதால் பல ஆப்கானிஸ்தான் குடிமக்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்ப முடியாமல் வெளியில் சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.