துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 54 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆர்சிபி தொடக்க வீரர்களாக கேப்டன் கோஹ்லி, படிக்கல் களமிறங்கினர். படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல், பும்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் பிடிபட்டார். கோஜ்லி - ஸ்ரீகர் பாரத் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தது. பாரத் 32 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து கோஹ்லி - மேக்ஸ்வெல் ஜோடி சிறப்பாக விளையாடி 51 ரன் சேர்த்தது. கோஹ்லி 51 ரன்னில் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார்.