புதுடெல்லி: ஒன்றிய அரசில் கூட்டுறவு துறைக்கு என தனி அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. இத்துறை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் தேசிய கூட்டுறவு மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில், நாடு முழுவதும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 2,100 பிரதிநிதிகளும், ஆன்லைன் மூலமாக 6 கோடி பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘தற்போது நாடு முழுவதும் 65,000 ஆக உள்ள கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டில் 3 லட்சமாக உயர்த்தப்படும்.