சென்னை: வியாசர்பாடி, திருமுல்லைவாயல் பகுதியில் ‘ரபேல் குரூப்ஸ்’ என்ற பெயரில் சிவன் நரேந்திரன் (30) என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனது நிறுவனத்தின் பெயரில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்தார். அதில், தங்களது நிறுவனத்தில் ரூ1 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ15 ஆயிரம் தருவதாகவும், பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து முதலீடு செய்த நபருக்கு முழு பணத்தையும் திரும்ப தருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.