தாலுகா அலுவலகத்தில் ஆர்ஐ செல்போன் அபேஸ்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு அடுத்த வல்லம் நேரு நகரை சேர்ந்தவர் பர்வீன் (35). வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார். இந்நிலையில், பர்வீன் நேற்று வழக்கம்போல் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள், அவரை சூழ்ந்துகொண்டு தங்களது கோரிக்கை மனு குறித்து விசாரித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மர்மநபர் ஒருவர் மாஸ்க் மற்றும் தலையில் தொப்பி அணிந்தபடி அங்கு வந்தார். பர்வின் பணியாற்றும் மேஜை அருகே சிறிது நேரம் நின்ற மர்மநபர், பொதுமக்களிடம் பேசியபடி பர்வீனின் செல்போனை நைசாக கொண்டு அவசர அவசரமாக வெளியேறினார். சிறிது நேரம் கழித்து தனது செல்போனை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்படி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: