துபாய்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. ஐபிஎல் 14 வது சீசனின் 32வது போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. ஐபிஎல் 2021-ல் சஞ்சு சாம்சனின் ராயல்ஸ் அணி தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான 4 போட்டிகளில் ராயல்ஸ் தோல்வியடைந்தது.