பழநி : பழநியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இதில் தெரசம்மாள் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள போர்வெல்களும் பழுதடைந்துள்ளன. இதனால் குடிநீர் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு தண்ணீரின்றி இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் நேற்று குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய வலியுறுத்தி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் தெரசம்மாள் காலனி மக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.