லத்தேகர்: ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினரின் மிக முக்கிய திருவிழாக்களில் கர்ம பூஜையும் ஒன்று. இந்த பூஜையின்போது முளைப்பாரி எடுத்து சென்று ஆற்றில் விடுவது வழக்கம். இந்தாண்டுக்கான கர்ம பூஜை நேற்று நடந்தது. அப்போது, லத்தேகர் மாவட்டம், ஷரெகடாவில் உள்ள பக்ரூ கிராமத்தில், முளைப்பாரியை ஆற்றில் விடுவதற்காக 12 முதல் 20 வயதுக்குட்பட்ட 7 சிறுமிகள் ஆற்றில் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறுமி ஆற்றில் மூழ்கியதும் அவரை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்தது சிறுமிகள் ஆற்றில் இறங்கினர்.