திருவனந்தபுரம்: பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம் என கேரள முதல்வர் தமிழில் ட்வீட் செய்துள்ளார். பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். இந்நிலையில் இன்று தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.