கடலூர்: சென்னை மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரண் அடைந்தனர். சென்னை மந்தவெளியை சேர்ந்தவர் கோபி என்ற உருளை கோபி (39). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆவின் பால் விற்பனை கடையும் நடத்தி வந்தார். கடந்த 14ம் ேததி இரவு கோபி மயிலாப்பூர் அப்பு தெருவில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கோபியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.