செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், பவுஞ்சூர் அடுத்த பெரிய வெளிக்காடு கிராமத்தில் வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மறு புனரமைத்து வளாகத்தில் புதிய சாமி சிலைகள் அமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கோயிலில் கடந்த 13ம் தேதி அனுக்ஞை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி, 14ம் தேதி நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாக பூஜை, கும்ப அலங்காரம், 15ம் தேதி அக்கிகார்யம், மூலமந்திர ஹோமங்கள், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தன.