விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய பாதுகாப்பு கருவியை கண்டுபிடித்து பள்ளி மாணவிகள் அசத்தியுள்ளார். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனங்களை இயக்கும் போது இயரிக் எய்டு கருவி மூலம் பின்னால் வரும் வாகனங்களின் ஒலியை கேட்கின்றனர். ஆனால் தலைக்கவசம் அணியும் போது அந்த ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த சிரமத்தை போக்கும் வகையில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவிகள் 3 பேர் புதிய சேஃப்டி எய்டு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.