ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நீட் தேர்வில் மோசடி செய்த மாணவியையும் அவருக்கு உதவியவர்கள் என மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ப்பூரில் தேர்வு எழுதிய மாணவி தினேஷ்குமாரி என்பவருக்கு உடந்தையாக தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த ராம்சிங், தேர்வு மைய நிர்வாக பொறுப்பில் இருந்த முகேஷ் ஆகியோர் வினாத்தாளை போட்டோ எடுத்து அதனை வாட்ஸ்அப் வழியாக ஜெய்ப்பூரில் சித்ரகூத் பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் இருந்த இருவருக்கு அனுப்பியுள்ளனர்.