குடியாத்தம்: குடியாத்தத்தில் 200 கூலிக்காக பாதுகாப்பு உபகரணங்களின்றி குடும்பத்தினருடன் தொழிலாளி ஒருவர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தைப்பேட்டை பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், அலுவலகம் உள்ளது. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் உள்ள கால்வாய்களில் செல்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் போலீஸ் நிலையம் அருகே செல்லும் 7 அடி ஆழமுள்ள கழிவுநீர் கால்வாயில் பச்சையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளியப்பன்(57) என்பவர், தனது மனைவி மற்றும் 18 வயது மகள், 4 வயது மகனுடன் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.