தருமபுரி: தருமபுரி அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து 4 லாரிகள் மோதிய விபத்தில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் தொப்பூரில் செப்டிக் கிளீனிங் லாரி ஒன்று பழுதாகிய நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக கருக்கல் பாரம் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. அடுத்தடுத்து வந்த மேலும் 3 லாரிகளும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.