சென்னை: ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பணியாளர் நலச்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கம் தலைவர் மணிமொழி, பொது செயலாளர் டாக்டர் டி.மகிமை தாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைககளை பாதுகாக்க தமிழ்நாடு ஆதிராவிடர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார். இதுதொடர்பான சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.