மீனம்பாக்கம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த், துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30ம் தேதி விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்கள் சென்றனர். விஜயகாந்துக்கு லண்டன் டாக்டர் ஒருவர் சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே விஜயகாந்த் மனைவி பிரமலதா, கடந்த 3ம் தேதி அதிகாலை விமானத்தில் துபாய் சென்றார்.