துபாயில் மருத்துவ சிகிச்சைக்கு பின் விஜயகாந்த் சென்னை திரும்பினார்..!

மீனம்பாக்கம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த், துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30ம் தேதி விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்கள் சென்றனர். விஜயகாந்துக்கு லண்டன் டாக்டர் ஒருவர் சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே விஜயகாந்த் மனைவி பிரமலதா, கடந்த 3ம் தேதி அதிகாலை விமானத்தில் துபாய் சென்றார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜயகாந்த் குணமடைந்து நல்ல நிலையில் மருந்துவமனையில் டிவி பார்த்து கொண்டிருப்பது போலவும், அவர் அருகே அவருக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள் அமர்ந்திருப்பது போலவும் புகைப்படம் வெளியானது. இந்த நிலையில் விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் இன்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தார். பின்னர், கார் மூலம் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories: