நைனிடால்: மக்களின் பேஸ்புக் கணக்கில் புகுந்து ஆபாச படங்களை உருவாக்கி, ஹேக்கர்கள் பணம் பறிப்பதை தடுப்பது தொடர்பாக 3 வாரங்களில் பதில் அளிக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கும், பேஸ்புக் நிறுவனத்துக்கும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரை சேர்ந்த வக்கீல் ஒருவர் இம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், `எனது பேஸ்புக் முகவரிக்கு வந்த பல நட்பு கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்ததும், அவை ஆபாச வீடியோ இணையதள முகவரிகளாக மாறிவிட்டன. இவ்வாறாக, போலி பேஸ்புக் முகவரியில் வலம் வரும் ஹேக்கர்கள், நட்பு கோரிக்கை பெற்றதும், அதில் இருக்கும் மக்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, தவறான, ஆபாச வீடியோக்களை உருவாக்குகின்றனர்.